Thursday, 28 April 2016

இசை - காதல் கவிதை

அலங்கார தோரணங்களால் 
காற்று மண்டலத்தில் 
கவிதை சிலைகளை 
அமரவைத்து அழகு பார்க்கும் 
நந்தவன தேர் 

புத்தகத் தீவுகளில் 
அடிமைகளாகிக் கிடந்த வரிகளை 
விடுதலையாக்கி 
தென்றல் சாகர வீதிகளின் வழியே 
கரையேற்றும் படகு. 

துயிலும் வாத்தியங்களின் 
தூக்கம் களைகையில் 
எழும்பும் ஈனஸ்வரங்கள் 

வாத்திய கிளைகளில் 
அமர்ந்திருக்கும் 
உருவமில்லா பறவைகள் 
இசைவேடர்களின் 
விரலம்புகள் பட்டதும் 
சிறகடித்து பறந்து மனித மரத்து 
செவிக்கூட்டுக்குள் ஒளிந்துகொள்கின்றன 

No comments:

Post a Comment