Thursday, 28 April 2016

கிராமிய இசை

மண்ணோடும் மண்ணின் மணத்தோடும் 
விதையோடும் விதையின் துளிர்ப்போடும் 
வரப்போடும் வரப்பின் ஈரப்பதத்தோடும் 
பயிரோடும் பயிரின் வாசத்தோடும் 
இழையோடி விளையாடும் எங்கள் இசை.. 
இசைக்கு மூத்த இசை எங்கள் கிராமியத் தேனிசை..! 

வண்டியோடும் தாளத்திலும் 
காளைகளின் கொம்பு மணி ஓசையிலும் 
லாடக் குளம்புகளின் லயத்தினிலும் 
பால் வேண்டி கத்துகின்ற 
பசுக்கன்றின் நா அசைவிலும் 
பிறந்து வரும் பிறவி இசை எங்கள் கிராமியத் தேனிசை...! 

No comments:

Post a Comment